• 193. கொலைபாதகன் - க.நா.சு
    Apr 23 2026

    "கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. நான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம் – ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு – அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.

    இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்." --- க.நா.சு

    Show More Show Less
    20 mins
  • 192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன்
    Apr 12 2026

    சிறுவயதில் நம்மை விட திறமை வாய்ந்தவர்களை, தனித்தன்மை கொண்டவர்களை பெரும்பாலும் நாம் வெறுக்கவே செய்திருக்கிறோம் - அவர்கள் எல்லோர் பாராட்டையும் பெறுவது நமக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கிறது. அப்படி இருந்த ஒரு நண்பன் இப்போது கொள்கைகளை துறந்து சாதாரணமாய் இருக்கிறான் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவனது இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அற்புதமான கதை. அ. பாண்டியனின் அருமையான படைப்பு.

    Show More Show Less
    17 mins
  • 191. சத்ரு - பவா செல்லதுரை
    Apr 5 2026

    191. சத்ரு - பவா செல்லதுரை

    வறண்ட நிலமும் மனங்களும் கொடுந்தன்மை கொண்டுவிடுகின்றன. ஒரு மழை. ஒரே ஒரு மழை. எல்லாம் மாறிவிடுகிறது. கருணை எங்கும் பரவுகிறது. இது தெய்வச் செயலா அல்லது தானாய் நிகழ்ந்ததா?

    இந்தக் கதையில் யார் சத்ரு? உங்களுக்கு தெரிந்தால் email அனுப்புங்கள்.

    Show More Show Less
    16 mins
  • 190. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்
    Mar 30 2026

    எளிய நடை. பெரிய புதிர். தளர்வில்லாமல் நகர்கிறது இந்த கதை. விமலாதித்த மாமல்லனின் அருமையான கதைகளில் ஒன்று.

    நான் பதிந்திருக்கும் விமலாதித்த மாமல்லனின் மற்ற கதைகள்:

    84. வலி - விமலாதித்த மாமல்லன்

    Show More Show Less
    20 mins
  • 189. கல்வி - அசோகமித்திரன்
    Mar 20 2026

    47 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை. கல்வி என்பது எப்படி மனித நேயமற்று, குழந்தைத்தனத்தை கொடூரமாக சிதைக்கும் படியாக இருந்தது என்பதை தனக்கே உரிய சரள நடையில் அசோகமித்திரன் சொல்லும்போது மனது வலிக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது நமது ஆரம்ப கல்விச் சாலைகள்?

    நான் பதிந்திருக்கும் மற்ற அசோகமித்திரனின் கதைகள்:

    174. சுந்தர் - அசோகமித்திரன்

    158. தனியொருவனுக்கு - அசோகமித்திரன்

    152. முனீரின் ஸ்பானர்கள் - அசோகமித்திரன்

    138. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்

    102. காந்தி - அசோகமித்திரன்

    47. அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன்

    15. புதிர் - அசோகமித்திரன்

    34. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்

    24. விடிவதற்கு முன் - அசோகமித்திரன்

    71. பிரயாணம் - அசோகமித்திரன்

    ⁠3. ரோசம் - அசோகமித்திரன்⁠

    Show More Show Less
    18 mins
  • 188. கோடித்துணி - பெருமாள் முருகன்
    Mar 7 2026

    "கொங்கு மக்களின் வாழ்வையும், வாழ்வியல் உள்மடிப்புகளையும் , வட்டார வழக்கையும் எழுத்தாக்கியவர் பெருமாள் முருகன். ஏறுவெயில்,நிழல் முற்றம் கூளமாதாரி மூன்று நாவல்களும் பதின்ம வயது சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட படைப்புகள். விளிம்பு நிலை வாழ்வின் நேர்த்தியான சித்தரிப்பு அவரது புனைவுலகத்தின் சிறப்பம்சம்." https://tamil.wiki/wiki/பெருமாள்_முருகன்

    "எழுதுவது மனதிருப்தியை தருகிறது. மனதில் உள்ளதை இடம், காலம் கடந்து பலரோடு பகிர்ந்துகொள்வதற்கும், மனதில் உள்ள அழுத்தம், வேதனையிலிருந்து விடுதலை பெறுவதற்குமே எழுதுகிறேன்." என்கிறார் பெருமாள் முருகன்.

    நான் பதிந்திருக்கும் பெருமாள் முருகனின் மற்ற கதைகள்:

    173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

    Show More Show Less
    19 mins
  • 187. சிலுவைப்பாதை - கமல தேவி
    Feb 28 2026

    உலகத்தில் எல்லோருக்கும் தேவைப்படுவது, எல்லோராலும் கொடுக்கக்கூடியது, கொடுத்தாலும் குறையாதது எது? அது இந்த கதை முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வெறுப்பை வளர்க்கும் இந்த காலகட்டத்தில் இந்த கதை ஒரு மருந்து.

    நான் பதிந்திருக்கும் கமலதேவியின் மற்ற கதைகள்:

    165.கண்ணாடிப் பரப்பு - கமலதேவி

    Show More Show Less
    22 mins
  • 186. வாசனை - பிரபஞ்சன்
    Feb 22 2026

    186. வாசனை - பிரபஞ்சன்

    கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சிற்சில விஷயங்களில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், தனியாக வாழும் பெண்களைப் பற்றிய எண்ணப்போக்கு பெரிதாய் மாறவில்லை என்று தான் தோன்றுகிறது. படிக்கும் வாசகர்க்கும் கூட ஒரு பரிட்சை வைத்திருக்கிறார் பிரபஞ்சன். எங்கே என்று சொல்லுங்கள்! அனுப்ப வேண்டிய இமெயில் rams.villageres@gmail.com

    நான் பதிந்திருக்கும் பிரபஞ்சனின் மற்ற கதைகள்:

    23. பிரும்மம் - பிரபஞ்சன்

    81. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

    89. பாதுகை - பிரபஞ்சன்

    Show More Show Less
    33 mins