• Um Kai En Aaththumavai - உம் கை என் ஆத்துமாவை
    Feb 24 2026
    https://tamilchristiansongs.in/tamil/lyrics/um-kai-en-aaththumavai/

    உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
    உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும்
    உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
    உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2

    பறந்து காக்கும் பட்சி போல
    என்னை காக்கும் தேவனே
    பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
    தஞ்சம் கொண்டேனே-2

    இயேசுவே…….
    உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
    இயேசுவே…….
    உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2

    மனம் திறந்து உணர்ந்து நான்
    என்னை உமக்கு தந்தேன்
    வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
    மீண்டும் நெருங்கினேன்-2
    உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
    என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்
    Show More Show Less
    3 mins
  • unnatharae um maraivil - உன்னதரே உம் மறைவில்
    Feb 24 2026
    அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு
    புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - (என்)
    புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - 2

    மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2


    1. தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர்
    உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2
    கேடகம் நீரே என் மகிமையும் நீரே
    என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே

    2. உம்மை நோக்கி கூப்பிடும்போது
    எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2
    ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
    என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே

    3. நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
    உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர் - 2
    இரட்சிப்பு நீரே, என் இரட்சகர் நீரே
    நான் சுகமாய் வாழ, காரணர் நீரே - 2 - மறைவிடமே
    Show More Show Less
    7 mins
  • Ennai Visaripaar - என்னை விசாரிப்பார்
    Feb 2 2026
    https://www.christsquare.com/tamil-christian-songs/ennai-visaripaar-lyrics-song-chords-ppt/

    1. என்னை விசாரிப்பார் என்னை போசிப்பார்
    எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
    துன்ப நாளில் னகவிடாமல்
    தம் சிறகின் நிழலில் மனறப்பார்

    நம்புவதற்கு எனக்கென்றும்
    சர்வவல்லவர் கூட உண்டு
    தளராமல் வனாந்திரத்தில்
    யாத்திரை செய்வேன் நம்பிக்னகபயாடு

    2. பொல்லாப்புகள் நேரிடாது
    வாதை யோ உன்னன அணுகாது
    பானதகளில் தேவனுடைய
    தூதர்கள் தம் கரங்களில் தாங்குவார்

    3. சேருவேன் நான் இயேசுவோடு
    அவர் நாமத்தின் வல்லனம அறிவேன்
    கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
    தீர்க்காயுசால் திருப்தியாக்குவார்
    Show More Show Less
    8 mins
  • Thaayin Vayittril Thondrina Naal Mudhal
    Jan 4 2026
    தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்

    Thaayin Vayittril Thondrina Naal Mudhal

    https://songs.wcflondon.com/thaayin-vayittril-thondrina-naal-mudhal/
    Show More Show Less
    6 mins
  • Naan Nirkum Boomi
    Jan 4 2026
    Naan Nirkum Boomi - நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்

    https://tamilchristiansongs.in/lyrics/naan-nirkum-boomi-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-nambuven-yen-ye/

    Naan Nirkum Boomi
    1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
    என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2)
    நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)

    நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)

    2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
    வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2)
    என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)

    நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)
    Show More Show Less
    5 mins
  • Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே
    Mar 6 2025

    Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே


    https://tamilchristiansongs.in/lyrics/um-maarbil-saainthaal-sugamae/


    உம் மார்பில் சாய்ந்தால் சுகமே

    உம் தோளில் கிடந்தால் ஜெயமே

    உம் கைகள் என்னில்

    கோர்த்தால் பரிசுத்தமே

    உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்


    மானானது நீரோடையை

    வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்

    உம் அன்பிலே மூழ்கணுமே

    உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில்


    மணவாளனே உமக்காகவே

    பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்

    மணவாட்டி என்னை உம் வருகையில்

    உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்

    Show More Show Less
    5 mins
  • Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    Mar 6 2025
    Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

    https://tamilchristiansongs.in/lyrics/kalvari-anbai-ennidum-velai/

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
    உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

    கெத்செமனே பூங்காவினில்
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் தொனிக்கின்றதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே

    சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
    அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே

    எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
    தரை மட்டும் தாழ்த்துகிறோம்
    தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும்

    Show More Show Less
    5 mins
  • Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இயேசுவே
    Mar 6 2025
    Thanthen Ennai Yesuve

    https://tamilchristiansongs.in/tamil/lyrics/thanthen-ennai-yesuve/

    தந்தேன் என்னை இயேசுவே
    தந்தேன் என்னை இயேசுவே
    இந்த நேரமே உமக்கே

    அனுபல்லவி

    உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
    தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்

    சரணங்கள்

    1. ஜீவ காலம் முழுதும்
    தேவ பணி செய்திடுவேன்
    பூவில் கடும் போர் புரிகையில்
    காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்

    2. உலகோர் என்னை நெருக்கிப்
    பலமாய் யுத்தம் செய்திடினும்
    நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
    நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்

    3. உந்தன் சித்தமே செய்வேன்
    எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
    எந்த இடம் எனக்குக் காட்டினும்
    இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்

    4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
    துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
    அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
    அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்

    5. ஒன்றுமில்லை நான் ஐயா
    உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
    அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
    இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்
    Show More Show Less
    4 mins